திருமாங்கல்யத்தை உண்டியலில் செலுத்தியபிறகு, வேறு மாங்கல்யம் அணியலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2018 02:07
கட்டாயமாக. திருமாங்கல்யம் இல்லாமல் ஒரு நிமிடம்கூட சுமங்கலிகள் இருக்கக்கூடாது. ‘கண்ணுக்கு அணிகலன் காருண்யம். கழுத்துக்கு அணிகலன் மாங்கல்யம்’ என்பது நம் மண்ணின் மரபு. திருமாங்கல்யத்தை நேர்த்திக்கடனாக செலுத்தும் முன்பே, விரலிமஞ்சளை மஞ்சள்கயிற்றில் கட்டி கழுத்தில் அணிந்து இருக்க வேண்டும். பிறகு ஒரு சுப முகூர்த்தநாளில் புதுமாங்கல்யம் வாங்கி அணிந்து கொள்ள வேண்டும்.