பதிவு செய்த நாள்
11
ஜூலை
2018
11:07
மேட்டுப்பாளையம்: ஆடிக்குண்டம் விழாவை அடுத்து, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று குண்டம் கண் திறக்கும் விழா நடந்தது. கோவை
மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. வழக்கமாக ஆடிக்குண்டம் விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு விழா, 17ல் பூச்சாட்டுடன் துவங்குகிறது. 20ல் லட்சார்ச்சனை, 21ல் கிராமசாந்தி, 22ல் கொடியேற்றம், 23ல் பொங்கல்வைத்து குண்டம் திறப்பு, 24ம் தேதி காலை, 6:00க்கு குண்டம் இறங்கும் விழா நடை பெறுகிறது. விழாவின் ஏழாம் நாள், 25ம் தேதி மாவிளக்கு படைத்தல், 26ல் ப ரிவேட்டை, 27ல் மஞ்சள் நீராட்டு, 30ல் குத்துவிளக்கு பூஜை, 31ல் மறுபூஜை நடைபெற உள்ளது. நேற்று காலை, 7:00 மணிக்கு குண்டம் கண் திறப்பு துவக்க விழா, கோவில் உதவி கமிஷனர் ராமு தலைமையில் நடந்தது.