Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குழந்தை பாக்கியம் கேட்டு ‘தொட்டில்’ ... திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர் வெள்ளோட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிங்க பெருமாள் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
நரசிங்க பெருமாள் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2018
10:07

உத்தமபாளையம் பிரசித்தி பெற்ற உத்தமபாளையம் நரசிங்க பெருமாள் கோயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் நேற்று கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


உத்தமபாளையம் நரசிங்கபெருமாள் கோயில் புராதானமானதும், பிரசித்திபெற்றதுமாகும். 600 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில ஆண்டாக திருப்பணி நடந்தது. கம்பம் ராமலிங்கம்பிள்ளை அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் ரா.பாஸ்கர் ரூ. 25 லட்சத்தில் பணிகள் செய்து ஆரம்பித்து வைததார். தொடர்ந்து பழனிவேல்ராஜன்,மொட்டையாண்டி, அய்யப்பன், மன்னார்செட்டியார், முத்துராமன், கவுடர் சமுதாயம் உள்ளிட்ட பலர் உபயதாரர்களாக இருந்து பணிகளை மேற்கொண்டனர். ரூ. 1 கோடியில் திருப்பணிகள் முடிவடைந்துள்ளது. மகாகும்பாபிேஷகம் ஆக.23ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


பிரதிஷ்டை: ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 29 அடி நீளம் கொண்ட தேக்கு மரத்தில் கொடிமரம் தயாரிக்கப்பட்டிருந்தது. நேற்று கோயில் வளாகத்தில் அதனை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. கர்ணம் குடும்பத்தின் சார்பில் ரவி தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக அதிகாலை முதல் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோயில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர். காலை 9:50 மணிக்கு கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நான்கு திசைகளிலிருந்து பக்தர்கள் கயிறு கொண்டு இழுத்து கொடிமரத்தை நிலை நிறுத்தினர். நாராயணா, கோவிந்தாஎன கோஷமிட்டனர். வானில் கருடன் வட்டமிட்டது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சியில் பிடிஆர் விஜயராஜன், செயல்அலுவலர் செந்தில்குமார், ஓம் நமோ நாராயணா பக்த சபை நிர்வாகிகள் அய்யப்பன், ராயல்ரவி, ஞானவேல், பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar