Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கையில் ருத்ராட்ச மரம் இடையர்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா இடையர்பாளையம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் மரணம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் மரணம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2018
11:07

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில், ஜீயர் மடத்தின், 50வது பட்டமாக திகழ்ந்த ஸ்ரீரங்க நாராயண ஜீயர், உடல் நலக்குறைவால், நேற்று மாலை உயிரிழந்தார். பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகத்தை நெறிப்படுத்தி, தினசரி வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தவர் ராமானுஜர். வடக்கு கோபுரத்தின் அருகில், இவர் தங்கியிருந்து, சேவை செய்த மடம், ஜீயர் மடம் என அழைக்கப்படுகிறது. இந்த மடத்தின், 50வது பட்டமாக, ஸ்ரீரங்க நாராயண ஜீயர் இருந்தார். 89 வயதான இவர், ஜீயர் பொறுப்புக்கு வந்து, 28 ஆண்டுகள் ஆகின்றன. உடல்நலக் குறைவு காரணமாக, தூக்கமின்றி தவித்த அவரை, திருச்சி, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று மாலை, 3:20 மணியளவில், சிகிச்சை பலனின்றி, ஜீயர் உயிர்இழந்தார். இன்று, அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது. ஸ்ரீரங்க நாராயண ஜீயர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகப் பணிகள் மட்டுமின்றி, உலக நன்மைக்காக, பல்வேறு இடங்களில், யாகங்களை நடத்தியுள்ளார். சமீபத்தில், ராமானுஜரின், 1,000வது ஆண்டு விழாவையும், சிறப்பாக நடத்தினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; நாளை 17 ம் தேதி ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை ஸ்ரீவாரி கோவிலில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, நாளை ஏப்ரல் 17ம் தேதி பிரமாண்ட ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி மூன்று மாத கொடியேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar