திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2018 02:07
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு: திருச்சிற்றம்பலம், கிளியனூர், ஒழிந்தியாம்பட்டு ஆகிய பகுதியில் சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு கைலாசநாதர், இரும்பை மாகாளீஸ்வரர், ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர், கிளியனூர் அகஸ்தீஸ்வரர் ஆகிய கோவில்களில் மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஜூலை 11)ல் மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை சுவாமி மூலவர் மற்றும் நந்தி பெருமானுக்கு பால், சந்தனம், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங் களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.