பதிவு செய்த நாள்
13
ஜூலை
2018
02:07
திருப்பூர்:இறைவனை சரணாகதி அடைந்து, முக்தியை அடையுங்கள், என, கோமடம் சுவாமி பேசினார்.
திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில், மஹாபாரத தொடர் சொற்பொழிவு நடந்து வரு கிறது. இதில், கோமடம் சுவாமி பேசியதாவது:ஆன்மிக சொற்பொழிவை கேட்பதும், இறைவன் நாமத்தை உச்சரிக்கும் பாக்யமும், அனைவருக்கும் கிடைப்ப தில்லை. இறைவனின் கருணை இருந்தால் மட்டுமே, இந்த பாக்யம் கிடைக்கும். ஆன்மிக சொற்பொழிவுகளில், பக்தர்கள் பெறும் ஞானத்திற்கு அழிவே இல்லை; அழியாத செல்வம் கிடைக்கிறது.
அன்பு கலந்த பக்தியுடன், இறைவனின் பாதத்தை சரணடைந்தவர் களுக்கு மட்டுமே, கிருஷ்ணபகவானின் விஸ்வரூப தரிசனம் கிட்டியது.
முழுமுதல் தெய்வம் என்று அவனை முழுமையாக சரணாகதி அடைந்தவர்களுக்கு, சொர்க் கத்தின் வாசல் திறக்கப்படுகிறது. பக்தி மார்க்கத்திலும் அன்பு முக்கியம்; இறைவன் மீது அன்பு செலுத்தும் போது, பக்தி பெருகுகிறது. சதா இறைவனின் பெயரை மட்டுமே நினைத் தும், உச்சரித்தும் வந்தால், கடைசி தருவாயிலும் இறைவன் நாமம் மட்டுமே நெஞ்சில் இருக்கும். மீண்டும் பிறப்பெடுக்காமல், நேரடியாக வைகுண்ட வாசலை சென்றடைவர்.
கண்ணை திறந்து பக்தி செலுத்துவதை காட்டிலும், கண்ணை மூடிக்கொண்டு, மனதின் துணையுடன் இறைவனை வழிபட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.