மானாமதுரையில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி ஆரம்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2018 11:07
மானாமதுரை: மானாமதுரையில் விநாயகர் சதுர்த்திக்காக மண்ணால் ஆன விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிஆரம்பமாகி உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை யொட்டி அன்றைய தினம் வீடுகள்,மக்கள் கூடும் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இதற்காக மானாமதுரையில் மண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 13ந்தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்திக்காக தற்போதே மானாமதுரையில் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மண்பாண்ட தொழிலாளி சிவசங்கரி,37 கூறியதாவது: விநாயகர் சதுர்த்திக்கு 2 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே வெளிமாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் ஆர்டர் கொடுத்து சென்றுள்ளனர்.
தற்போதே வேலைகளை துவக்கினால் தான் செப்டம்பர் மாதம் சிலைகளை சப்ளை செய்ய முடியும் என்றும் ரூ.10 லிருந்து ரூ.4 ஆயிரம் வரை மதிப்புள்ள விநாயகர் சிலைகளை தயார் செய்து வருகிறோம்,என்றார்.