பதிவு செய்த நாள்
14
ஜூலை
2018
01:07
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், வரும், 17ல் தொடங்கும் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, நேற்று (ஜூலை 13)ல் காலை, 7:30 மணிக்கு, முகூர்த்தக்கால் நடப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க, 18 அடி உயர பாக்குமரத்துக்கு, மஞ்சள், குங்குமம், மாவிலை தோரணம் சகிதமாக, பூஜை செய்து, முகூர்த்தக்கால் நட்டு, கற்பூர தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. இரவு, சிறப்பு நாதஸ்வர கச்சேரி நடந்தது. வரும், 24ல், பூச்சாட்டுதல், 26ல், கம்பம் நடுதல், 30 காலை, 6:00 மணிக்கு கொடியேற்றம், இரவில், உற்சவர் வீதியுலா தொடக்கம், ஆக., 7ல் சக்தி அழைப்பு, 8ல், உருளுதண்டம், 9ல் பொங்கல் வைபவம், 10ல் தேரோட்டம், 12ல் வாணவேடிக்கை, 13ல் சத்தாபரணம் நடக்கிறது.