பதிவு செய்த நாள்
14
ஜூலை
2018
03:07
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரையில் அமைந்துள்ளது. கவுமாரியம்மன் கோயில். அறநிலையத்துறைக்கு உட்பட்டது. 18 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். 200 ஆண்டுகளுக்கு முன் பெரியகுளம் பகுதி மேற்கில் அமைந்திருந்தது. தற்போதுள்ள நகர் பகுதி காட்டுப்பகுதி யாக இருந்தது. அப்போது காட்டுமாரியம்மனாக பக்தர்கள் வழிபட்டனர். தற்போது கவுமாரி யம்மனாக அழைக்கப்படுகிறது.
உடல்நலம், கல்வி, தொழில் அபிவிருத்தி, திருமணம், குழந்தைப்பேறு, குடும்பத்தில் மகிழ்ச்சி உட்பட அனைத்து வரங்களையும் அம்மன் தருவதாக நம்பிக்கை. அதனால் பலர் தங்களது பிள்ளைகளுக்கு மாரியப்பன், மாரியம்மாள் என பெயர் சூட்டியுள்ளனர். கோயிலுக்குசெல்லும்
பக்தர்கள் இதர தெய்வங்களை வணங்கி விட்டு மூலவர் கவுமாரியம்மன் வணங்குகின்றனர்.
தினமும் ஒரு கால பூஜையும், செவ்வாய், வெள்ளி நாட்களில் உச்சிகால பூஜையும் நடக்கிறது. ஜூலை 3ம் ஆனித் திருவிழாவிற்கு கம்பம் நட வடகரை வரதப்பர் தெருவிலிருந்து பூஜாரி அருணாச்சலம் தலையில் சக்திகரகம் எடுத்து வரப்பட்டது. பூஜாரிகள் துரைப்பாண்டி, காமுத்துரைப்பாண்டி மற்றும் பங்காளி பூஜாரிகளுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. 10 நாட்கள் ஆனித்திருவிழா ஜூலை 9ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.
இன்று (ஜூலை 14)ல் 6ம் நாள் திருவிழா நடக்கிறது. திருவிழா காலங்களில் காலையில் திருக்கண் அபிஷேகமும் நடக்கிறது.9ம் நாள் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கம்பத்திற்கும், கோயில் பிரகார தெய்வங்களுக்குக்கும் தண்ணீர் எடுத்து ஊற்றுவர்.
ஆயிரம் கண்பானை மற்றும் மாவிளக்கு எடுத்து அம்மனை வணங்குவர். முக்கிய நிகழ்வான ஜூலை 18, 10ம் நாள் திருவிழாவில் அதிகாலை முதலே தென் மவாட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிப்படுவர். மறுபூஜையன்று தீர்த்த வாரி உற்ஸவம் நடக்கும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் அண்ணாதுரை,
மண்டகபடிதாரர்கள் செய்துள்ளனர்.
மேல் விபரங்களுக்கு செயல் அலுவலரை 94868 53284 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.