வேதங்களை கடத்திப்போய், பிரம்மனின் படைப்பு தொழிலை ஸ்தம்பிக்கச் செய்தனர். மது. கைடபர் என்ற இரு அசுரர்கள், அதனால் பாதிக்கப்பட்ட பிரம்மா, மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டார். கடுங்கோபம் கொண்ட திருமால், குதிரை முகத்துடன் ஹயக்கரீவராக தோன்றி கடலின் அடியிலிருந்த அசுரர்களோடு போரிட்டு வேதங்களை மீட்டு வந்த நாள் ஆடிப்பௌர்ணமி. போர் முடிந்த பின்னரும் தணியாத ஹயக்கிரீவரின் சீற்றத்தை தணிவிக்க மலர்மகள் அவரது மடியில் சென்றமர்ந்து அவரை துதித்தாள். அன்று முதல் லட்சுமி ஹயக்கிரீவ வழிபாடு பிரபலமடைந்தது. வேதங்களை மீட்டு வந்ததால் கல்விக்கு அதிபதி இவர். நிறைய மதிப்பெண்கள் பெற மாணவர்கள் ஹயக்கிரீவரை வணங்கி விட்டு முழுமையான முயற்சியுடன் படித்தால் நிச்சயம் பலன் கிட்டும்.