திண்டுக்கல் மலையடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2018 11:07
திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடி சீனிவாசப்பெருமாள் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோவிலில் ஆனித்திருவிழா ஜூலை 10ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, கோவில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. விழாவில் தினமும் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று (16ம் தேதி) திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.