பிறந்தது ஆடி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2018 11:07
தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கியது. இந்நாளில் கோயில், முன்னோர் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும். ஆடி அம்மனுக்கு உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடி மாதப்பிறப்பு மற்றும் ஆடி செவ்வாய் கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயிலில் பெண்கள் அதிக அளவில் அம்பாளை வழிபட்டனர். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் விஷேமானது என்பதால் அம்பாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் பெண்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அனைத்து அம்மன் கோயில்களிலும் இன்று ஆடிச் செவ்வாய் கிழமையை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பெண்கள் எலுமிச்சம் பழங்களில் பசுநெய் மற்றும் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டனர்.