வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடந்தது. காப்புக்கட்டு வைபவங்களுடன் பூஜைகள் துவங்கின. சதுரகிரி மலையடிவாரத்தில் வனபோஜனம் நடந்தது. சுவாமிக்குஅன்னப்படையல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. 3ம் நாளில் அமச்சியரம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்துஊர்வலமாக காளியம்மன் கோயிலுக்கு வந்தனர். அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.
வெள்ளைக்கல்விநாயகர் தரிசனமும், கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் ஊர்வலமாக கண்மாய் கரைக்கு சென்று கரகம்எடுத்து வந்தனர். கரகம் கோயிலை வந்தடைந்தவுடன் பெண்கள் மாவிளக்கு எடுத்து எதிர்சேவை செய்து வரவேற்றனர். கோயில் முன் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இறுதிநாளில் மஞ்சள் நீராட்டு ,முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்து ஊர்வலம் சென்றனர். இரவு கரகம் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. உறவின்முறை தலைவர் குருவையா, பொருளாளர் நடராஜன், செயலாளர் பச்சப்பழம், நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.