பதிவு செய்த நாள்
18
ஜூலை
2018
11:07
வில்லிவாக்கம்: தை மாத பிறப்பான, உத்தராயண புண்ணிய கால துவக்கத்தை கொண்டாடு வது போல, ஆடி மாத தட்சிணாயண புண்ணிய கால பிறப்பையும், ஹிந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு, ஆடி மாதம், செவ்வாய்கிழமையான நேற்று பிறந்தது. சாஸ்திரங்கள், ஆடியை, சக்தி வழிபாட்டுக்கான மாதம் என்கின்றன. ஆடி மாதம் முழுவதும், அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் நடைபெறும். சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம், செவ்வாய் தோஷ பரிகாரத் தலமாகும். இங்கு, இந்தாண்டிற்கான ஆடி மாத திருவிழா, நேற்று வெகுவிமரிசையாக துவங்கியது. முன்னதாக, காலை, 4:00 மணியளவில் அம்பாளுக்கும், உற்சவ மூர்த்திக்கும், விசேஷ சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.