பதிவு செய்த நாள்
18
ஜூலை
2018
11:07
காரைக்குடி: ஆடி முதல் நாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை களை கட்டியது. தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதம் செவ்வாயுடன் நேற்று தொடங்கியது. காரைக்குடியில் கொப்புடையம்மன், முத்தாளம்மன், மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை, அபிேஷகம், நடந்தது. நகரத்தார்கள் சார்பில் முத்துமாரியம்மனுக்கு 625 பால்குடம் மற்றும் அக்னிசட்டி எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வருகிற 20ம் தேதி முதல் வெள்ளியை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு மஞ்சள் அபிசேகம், 24–ம் தேதி பிராமணர்கள் சார்பில் பால்குடம், 27–ம் தேதி விளக்கு பூஜை, ஆக.3–ம் தேதி கணபதி ேஹாமம் மற்றும் 1008 சங்காபிேஷகம், 18–ம் தேதி கோமாதா பூஜை, விளக்கு பூஜை, 13–ம் தேதி வளையல் அலங்காரம் நடக்கிறது. ஆடியில் தள்ளுபடி: ஆடியில் ஜவுளிக்கு மட்டுமே இருந்த தள்ளுபடி அலைபேசி, ஐஸ்கிரீம், ரீசார்ஜ் கூப்பன் என நீண்டு கொண்டே செல்கிறது. காரைக்குடியில் உள்ள தனியார் ஜவுளிக்கடை முதல்நாளே பட்டுச்சேலைகளுக்கு 20 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனை அறிவிப்பை வெளியிட்டு, கீழ ஊரணி தனியார் மண்டபத்தில் விற்பனைக்கான ஏற்பாட்டை செய்திருந்தது. காலை முதலே காரைக்குடி, திருப்புத்துார், தேவகோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பெண்கள் கூட்டம் அலை மோதியது. பேன்சி பட்டுபுடவை, முகூர்த்த பட்டு, காஞ்சிபுரம், கும்பகோணம், ஆரணி, ஓவியா பட்டு, பெங்களூர் பட்டு என பல்வேறு வகையான பட்டு சேலைகளை வாங்கி சென்றனர்.