பதிவு செய்த நாள்
19
ஜூலை
2018
12:07
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, பூச்சாட்டுடன் துவங்கியது. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். ஆடிக்குண்டம் விழா நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. பவானி ஆற்றங்கரையில் உள்ள முத்தமிழ்
விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க, பூசாரி பரமேஸ்வரனை, அம்மனுக்குரிய ஆபரண அணிக்கூடையுடன் காப்புக்கட்ட கோவிலுக்கு அழைத்து வந்தனர். இரவு, 8:00க்கு பத்ரகாளியம்மனுக்கு காப்பு கட்டினார். சுப்ரமணியர் கோவில் அர்ச்சகர் தனசேகர குருக்கள், பூசாரி பரமேஸ்வரனுக்கு காப்பு கட்டி பூஜை செய்தார். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆடிக்குண்டம் பூச்சாட்டு நிகழ்ச்சி நெ ல்லித்துறை ஊர்பொது மக்கள் சார்பில்நடந்தது. கோவில் உதவி கமிஷனர் ராமு, கோவில் பணியாளர்கள், நெல்லித்துறை ஊர் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். வரும், 20ல் லட்சார்ச்சனை , 21ல் கிராமசாந்தி, முனியப்பன் பகாசூரன் வழிபாடு நிகழ்ச்சி, 22ல் கொடியேற்றம், 23ம் தேதி மாலை , 5:00க்கு பொங்கல் வைத்து குண்டம் திறக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வரும், 24ம் தேதி அதிகாலை, 3:00க்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பு, 6:00க்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று மதியம் அக்னி அபிேஷகம், 25ல் மாவிளக்கு படைத்தல், பூ பல்லக்கில் அம்மன் வீதி உலா, 26ல் குதிரை வாகனத்தில் பரிவேட்டை நிகழ்ச்சி, வானவே டிக்கை நடைபெற உள்ளது. 27ல் கொடி இறக்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு, 30ல், 108 திருவிளக்கு பூஜை, 31ல் மறுபூஜை நடைபெற உள்ளது.