Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி ... திருவாவடுதுறை ஆதீன மடத்தில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டி திருவாவடுதுறை ஆதீன மடத்தில் தேவாரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
தேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2018
11:07

தேனி : ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் நடை அதிகாலை 4:30 மணிக்கு தலைமை பூஜாரி காமுத்துரை தலைமையில் திறக்கப்பட்டது. பின்னர் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு காலபூஜை, தீபாராதனை நடந்தது. அதன்பின், திருமஞ்சனம், மஞ்சள் நீர், பச்சரிசிமாவு உள்ளிட்ட 11 அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

அணையா விளக்கு: கோயில் வளாகங்கள், அர்த்த மண்டபங்கள், மூலவர் அறைகளில் தீபம் ஏற்ற அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. கோயிலில் உற்சவர் பிரகாரத்திற்கு முன், பகதர்களால் நெய் ஊற்றப்பட்டு அதன் மூலம் எரிந்துகொண்டே இருக்கும் அணையா விளக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், பெண்கள் ஏராளமானோர் நெய் இட்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர். கவுமாரியம்மனை தரிசனம் செய்தனர்.

பிளாஸ்டிக் தடை: கோயில் வளாகத்தில் பக்தர்களின் அபிஷேக பொருட்களை கண்காணிக்க பெண் போலீசார் 18 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள், பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி, உடனுக்குடன் அப்புறப்படுத்தினர்.

* தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கொண்டுவரப்பட்ட 1,008 செர்ரிப் பூக்களால் மூலவர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

* தேனி என்.ஆர்.டி., நகர் கணேச கந்தபெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில் , அல்லிநகரம் ஆஞ்சநேயர் கோயில், வேல்முருகன் கோயில், வரசித்தி விநாயகர் கோயில், கோட்டூர் அங்காளஈஸ்வரி கோயில், வீரப்ப அய்யனார் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் உள்ள மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. சுருளிமலை பழநிமலை பாதயாத்திரை குழு பெண்கள் பஜனைப் பாடல்கள் பாடினர். எலுமிச்சை பழத்திலான விளக்குகளை அம்மன் முன் வைத்து ஏராளமானோர் வழிபட்டனர்.

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை கவுமாரியம்மன், கம்பம்ரோடு காளியம்மன், திரவுபதி அம்மன், பள்ளத்து காளியம்மன், தண்டுப்பாளையம் காளியம்மன், வடகரை பகவதியம்மன்கோயில்களில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அபிேஷகம் ,ஆராதனை நடந்தது.பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar