நினைத்தது நிறைவேறுது அருள்பாலிக்கும் வெள்ளை விநாயகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2018 12:07
அருப்புக்கோட்டை: இன்றைய சூழலில் மக்கள் பலவித துயரங்களுக்கு ஆளாகி விடுகின்றனர். வாழ்க்கையை இயந்திரத்தனமாக வாழ்ந்து வருகின்றனர். தினமும் பல்வேறு பிரச்னைகளை எதிர் நோக்க வேண்டியுள்ளது. பிரச்னைகளில் திக்குமுக்காடி போகும் வேளையில் தான் தெய்வங்களை நினைக்கின்றனர்.
அந்த வகையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நினைத்ததை நிறைவேற்றி தரும் ஆற்றல் படைத்த வெள்ளை விநாயகர் என்ற விஜயகணபதி சன்னதி உள்ளது.
இங்குள்ள பிள்ளையார் பக்தர்களின் சங்கடங்களை தீர்ப்பதில் வல்லவர். நினைத்த காரிய த்தை நன்கு முடித்து வைப்பவர். இந்த சன்னதியில் உள்ள பிள்ளையார் பெங்களூருவில் உள்ள ஒரு சிற்ப கூடத்தில் கைதேர்ந்த சிற்பிகளால் செய்யப்பட்டது. சிலை, அதன் பீடம், மூஷிக வாகனம் என 3 ம் சேர்ந்து 1 டன் எடையிலான வெள்ளை பளிங்கு கல் கொண்டு செய்யப்பட்டது. இதனால் வெள்ளை விநாயகர் ஆனார். காரியம் நிறைவேற, பிரச்னைகள் தீர பக்தர்கள் அருகம்புல், சர்க்கரை போன்றவைகளை வைத்து படைப்பர்.
சங்கடஹர சதுர்த்தி, சதுர்த்திகள் சிறப்பாக இங்கு நடக்கும். பிரச்னைகள் அகல விஜய கணபதியை தரிசனம் செய்யலாமே.