அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், ஆடி மாத முதலாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.இதே போல் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.