பதிவு செய்த நாள்
22
ஜூலை
2018
10:07
சின்னமனுார்: தேனி மாவட்டம், குச்சனுார் சனீஸ்வரர் கோவில், ஆடி சனிவாரத் திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. குச்சனுார், சுரபி நதிக்கரையில், சுயம்பு சனீஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 10:30 மணிக்கு, பூலாநந்தபுரம் ராஜகம்பளம் மாரைய நாயக்கர் வகையறாவினர், புனித நீர் தெளித்து, கலிப்பனம் கழித்தனர். கரகம் சுமந்து, கோவில் வளாகத்தை சுற்றி, சிறப்பு பூஜைகள் நடந்தன. தலைமை அர்ச்சகர், 11:30 மணிக்கு கொடியேற்றினார். தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆக., 3ல், பகல், 12:30 மணிக்கு சனீஸ்வரர் - நீலாதேவி திருக்கல்யாணம் நடக்கிறது.