வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், மக்கள் நோய்களின்றி சந்தோஷமாக வாழ, சண்டி ஹோமம் நேற்று நடந்தது. இதையொட்டி, 64 யோகினிகளுக்கு, பலி பூஜை, பூர்வாங்க யாகம் நடந்தது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, கலச பிரதிஷ்டை, மகா மேரு பூஜை, கணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.