பதிவு செய்த நாள்
22
ஜூலை
2018
11:07
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கடந்த, 20 காலை, விக்னேஷ்வர பூஜையுடன், மகா சண்டி ?ஹாம பூஜை தொடங்கியது. மாலை, வருண ஜெபம், குதிரை மீது, சண்டிதேவி கலச ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, சண்டி சப்த சதி புத்தக பூஜை, மாலை, வேத மந்திரங்கள் ஓதி, மகா சண்டி ?ஹாமம் நடந்தது. இரவு, சதுஷ் சஷ்டி யோகினி பைரவ பலி பூஜை ?ஹாமம் நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை முன்னிட்டு, அஷ்டதசபுஜ, 18 கைகள் கொண்ட மகா துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தனர்.