கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அருகே, வீட்டுகட்டியில் உள்ள, ராமக்காள் கோவிலில், ஆடிமாதம் முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக லாலாப்பேட்டை காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து, சுவாமிக்கு பல்வேறு வாசன திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், ராமக்காள், மதுரை வீரன் சுவாமிக்கு பலவித மலர்களால் அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. இதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.