பதிவு செய்த நாள்
23
ஜூலை
2018
10:07
சென்னிமலை: சென்னிமலை மலை மீது கோவில் கொண்ட, சுப்ரமணிய சுவாமிக்கு, 1,215 குடம் பாலாபிஷேக விழா, கோலகலாமாக நடந்தது.ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவிலில், ஆண்டு தோறும், ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில், சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர் சார்பில், பாலாபிஷேக பெருவிழா நடத்தப்படுகிறது.நேற்று, 51-வது ஆண்டாக, விழா நடந்தது. இதையொட்டி காலை, 8:00 மணிக்கு, 1,215 பால் குடங்களை சுமந்த பக்தர்கள், கைலாசநாதர் கோவிலில் இருந்து, மேள, தாளம் முழங்க, காவடி ஆட்டத்துடன், நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தனர். பின், மலைக்கோவிலுக்கு படி வழியாக சென்றனர். காலை, 11:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு, பாலாபிஷேகம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, உற்சவ மூர்த்தி பிரகார உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.