சாணார்பட்டி : சாணார்பட்டி சிலுவத்துார் அருகே வங்கமனுாத்தில் புனித சந்தியாகப்பர் ஆலய விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு 12:௦௦ மணியளவில் கபாலமலை சப்பர பவனி நடக்கிறது. நாளை மாலை மறைமாவட்ட பாதிரியார்கள் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இரவு இன்னிசை கச்சேரி நடக்க உள்ளது. நள்ளிரவு 1:௦௦ மணியளவில் தாரை தப்பட்டை, வாணவேடிக்கை முழங்க மூன்று புனிதர்களின் சப்பர பவனி நடக்கிறது. மறுநாள் காலை திருப்பலி நடக்க உள்ளது.