* பரிசுத்த நினைவின் காரணமாக சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன. * பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன. * கடன் கொடுத்து ஒருவருக்கு உதவுவது தருமத்தைச் சாரும். அழகிய முறையில் எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ அவர் தான் உங்களில் மேலானவர். * ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் உதவி செய்தவரை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதுவும் ஒருவகை நன்றிக் கடனாகும். * பக்குவமில்லாத காட்டு மிருகங்கள் மனிதனை விட்டுப் பயந்து ஓடுவது போல இறைவனின் பேரருளும் நன்றி கெட்டவனிடம் இருந்து ஓடி விடும். * மனிதனிடமுள்ள இயலாமை என்னும் பலவீனத்தை உணர்ந்தால் தான் நன்றி உணர்வு ஏற்படுவது சாத்தியமாகும். * உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு துஆ செய்யுங்கள். அதுவே உணவு அளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும்.