பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு, விஷ்ணு பங்கிட்டுக் கொடுத்தார். அப்போது அவர் மோகினி வடிவம் கொண்டிருந்தார். மோகினியிடம், சுவர்பானு என்ற அசுரன் தேவர்களைப் போல உருமாறி அமிர்தம் பெற்றான். விஷயமறிந்த விஷ்ணு, சுவர்பானுவை இருகூறாகப் பிளந்தார். ஆனால், அமிர்தம் அருந்தியதால் அவனது உயிர் பிரியவில்லை. பிளவுபட்ட பாகங்களில் மனிதமுகம் கொண்ட பகுதியுடன் பாம்பு உருவம் இணைந்து சண்டராகு என்றும், உடல்பகுதியின் மேல் பாம்புத்தலை இணைந்து துண்டராகு என்றும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், சண்ட ராகுவை ‘ராகு’ என்றும்’ துண்ட ராகுவை ‘கேது’ என்றும் அழைத்தனர். கையில் கத்தியும், கேடயமும் தாங்கி தேவர்களுடன் போர் புரிந்த போர்க்கோல ராகுகேதுவை, ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சி நாதேஸ்வரர் கோயிலில் தரிசிக்கலாம். இவரை வழிபட்டால் சர்ப்பதோஷம் நீங்கும். கும்பகோணத்திலிருந்து, நாச்சியார்கோவில் வழியாக நன்னிலம் செல்லும் வழியில் அச்சுதமங்கலம் உள்ளது. இந்த பஸ்ஸ்டாப்பில் இருந்து ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம். தூரம் 35 கி.மீ.,