பதிவு செய்த நாள்
10
ஆக
2018
11:08
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவின் ஐந்தாம் நாளான நேற்று பெரியாழ்வார் மங்களாசாசன வைபவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு பெரியாழ்வார், ஆண்டாள் கோயிலிலிருந்து ஆடிப்பூர பந்தலுக்கு எழுந்தருள பெரியபெருமாள், கருட வாகனங்களில் எழுந்தருளிய காட்டழகர் சுந்தரராஜபெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகிய பெருமாள்களுக்கும் மங்களாசாசனம் செய்தார். இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், பெரியாழ்வார் சின்ன அன்னவாகனத்திலும் எழுந்தருளினர்.
காலை 10:00 மணிக்கு துவங்கி மதியம் 2:00 மணி வரை நடந்த இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவு 10 :00 மணிக்குமேல் ஐந்து கருடசேவை நடந்தது.மணவாளமாமுனிகள் மட ஜீயர் சுவாமிகள், தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர்கள் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவில், ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள்,காட்டழகர் சுந்தரராஜபெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகிய பெருமாள்களுக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்தார்.