திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 11 ம் தேதி முதல் ஆகஸ்ட் 16 ம் தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.