பதிவு செய்த நாள்
10
ஆக
2018
11:08
சிவகங்கை, சிவகங்கை விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் ஆடிப்பூர உற்சவ விழா ஆக., 4 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை 8:00 மணிக்கு துர்க்கா ேஹாமம், விசேஷ அபிேஷகமும், இரவு 7:00 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, தீபாராதனையும் நடந்து வருகின்றன. நேற்று காலை 10:00 மணிக்கு கல்வி யாகம் நடந்தது. இன்று (ஆக., 10) மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஆக., 11 மாலை 6:00 மணிக்கு மாணவர்களுக்கான சிறப்பு பூஜை நடக்கிறது. ஆக., 12 காலை 8:00 மணிக்கு வராகி அம்மன் ேஹாமம், மாலை 6:00 மணிக்கு மகா சண்டியாகம் துவங்குகிறது. தொடர்ந்து கலச பூஜைகள், தேவி மகாத்மிய சப்தசதி பாராயண ேஹாமம், இரவு 10:00 மணிக்கு பூர்ணாகுதி, 64 பைரவர், யோகினி பலி நடக்கிறது. ஆக., 13 காலை 6:00 மணிக்கு பால்குடம், காலை பறவைக்காவடி, 11:30 மணிக்கு அன்னதானம், மாலை 4:30 மணிக்கு பல்வேறு ேஹாமங்கள் நடக்கின்றன. இரவு 7:00 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. ஆக., 14 இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் அலங்காரத்துடன் விழா நிறைவு பெறுகிறது.