வளையல் அலங்காரத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2018 01:08
ராஜபாளையம்:ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில்ஆடிமாத வெள்ளியை முன்னிட்டு அம்மன்,வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை முன்னிட்டு காலை முதல் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரம் செய்யப்பட்டது. சுற்று ப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கோயிலில்பொங்கல்,கூழ் காய்ச்சி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட வளையல்களை கொண்டு அம்மனுக்கு அலங்காரம் நடந்தது. சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அம்மன் அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.