பதிவு செய்த நாள்
12
ஆக
2018
01:08
கரூர்: ஆடி அமாவாசையொட்டி, நெரூர் காவிரியாற்றில் ஏராளமான பொதுமக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். ஆடி மாதத்தில் வரும் அமாவாசையில், பித்ரு தோஷம் நீங்கவும், முன்னோர் ஆன்மா சாந்தியடையவும், தர்ப்பணம் செய்வது வழக்கம். நேற்று ஆடி மாத அமாவாசையையொட்டி, வேலாயுதம்பாளையம், வாங்கல், நெரூர் காவிரியாற்று பகுதியில், ஏராளமான பொதுமக்கள், காவிரியில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும், கரூர் மாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில்களில், ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.