பதிவு செய்த நாள்
12
ஆக
2018
01:08
நாமக்கல்: நாமக்கல் - திருச்சி சாலை வரகுரம்பட்டி செல்லும் வழியில், ஸ்ரீசாய் தத்தா பிருந்தாவன் பிரார்த்தனை ஸ்தலம் மற்றும் தியான மண்பம் அமைந்துள்ளது. இங்கு, அமைந்துள்ள ராகவேந்திர சுவாமிகளின், 347வது ஆராதனை மஹோத்சவம், வரும், 29ல் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபி?ஷகம் நடக்கிறது. காலை, 11:30 மணிக்கு, மகா தீபாராதனை, பகல், 12:00 மணிக்கு, ஆரத்தி, 12:30 மணிக்கு, அன்னதானம் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு, விஜயலட்சுமி வெங்கடேஷ் குழுவினரின் பஜனை நடக்கிறது. விழாவில் பக்தர்கள் பங்கேற்று சுவாமிகளின் அருள்பெற வேண்டும் என, விழா கமிட்டியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.