பதிவு செய்த நாள்
13
ஆக
2018
11:08
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழாவை யொட்டி, ஆடித்தேரோட்டம் நடந்தது.ராமேஸ்வரம் கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழா ஆக.,4ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.9ம் நாளான நேற்று ராமேஸ்வரம் கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். பின் அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, தக்கார் குமரன்சேதுபதி, கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பஷே்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கோயில் ரதவீதியில் தேரோட்டம் நடந்தது.
பரமக்குடி: பரமக்குடி அருகேயுள்ள நயினார்கோவில்நாகநாதசுவாமி கோயிலில் ஆடி தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா ஆக. 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம் மன் சிம்மம், யானை, பல்லக்கு, கிளி, குதிரை வாகனங்களில் வீதியுலா வந்தார். நேற்று காலை 6:00 மணிக்கு ரதாரோகணமும், தொடர்ந்து 9:00 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் தேரினை இழுக்க, நான்கு மாட வீதிகள் வழியாக10:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. நாளை காலை 6:00 மணிக்கு அம்மன் தபசு மண்டபத்தில் எழுந்தருளி, பின்னர் ரிஷப வாகனத்தில்சுவாமியுடன் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடக்கும்.ஆக. 15ல் காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் நாகநாதசுவாமிக்கும்,சவுந்தரநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம், இரவு சப்பரத்தில் வீதியுலாநடக்கவுள்ளது.
திருவாடானை: திருவாடானையில் சிநேகவல்லி உடனாய ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்திருவிழா ஆக.4ல் கொடியேற்றத்துடன்துவங்கியது. நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. சிநேகவல்லி அம்மன் அமர்ந்ததேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாலை 5:00 மணிக்குநிலைக்கு சென்றடைந்தது.செயல் அலு வலர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆக.14ல் அம்பாள் தவசும்,மறுநாள் திருக்கல்யாணமும், ஆக.18ல் கொடியிறக்கமும் நடைபெறும்.