பதிவு செய்த நாள்
14
ஆக
2018
02:08
மேட்டூர்: ஆடி, 28 பண்டிகையை முன்னிட்டு, நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அணை முனியப்பனை வழிபாடு செய்தனர். தட்சிணாயன புண்யகாலம் துவக்க மாதமான ஆடி, 1, ஆடி, 18, ஆடி, 28ல் காவிரியாற்றில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்வது வழக்கம். நேற்று ஆடி, 28 ஐ முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள், மேட்டூர் வந்து காவிரியாற்றில் நீராடினர். பின், அணை அடிவாரம் வீற்றிருக்கும் முனியப்பனுக்கு கிடா, கோழிகள் வெட்டி நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்து, அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.