இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவர்கள் நாட்டில் மிகக்குறைவு.ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு காட்டைக் கடக்கவேண்டியிருந்தது. அங்கே ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் தனது வெற்றிக்காக ஆசி பெறச்சென்றான். காட்டில் கடும் குளிர் அடித்தது.முனிவரோ, இடையில் ஒரு ஆடை மட்டுமே <உடுத்தியிருந்தார். தியானத்தில்ஆழ்ந்திருந்த அவருக்கு, தனது மேலாடையை எடுத்துப் போர்த்தினான் அரசன்.சற்று நேரம் கழித்து கண்விழித்த முனிவர் அரசனையும் பரிவாரங்களையும் பார்த்தார்.“யாரப்பா நீ! எதற்காக இங்கே நிற்கிறாய்!“முனிவரே! நான் பண்ணைபுர நாட்டின் அரசன். பக்கத்து நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறேன். நான் வெற்றி பெற. தங்களிடம் ஆசி பெறவே காத்திருக்கிறேன்,”. “சரி...எனக்கு அணிவித்த இந்த மேலாடையை எடுத்துச் செல்,”.“உங்களுக்கு குளிரும் என்று தானேஅணிவித்தேன்!”.“தேவையில்லை! நான்ஏற்கனவே பணக்காரன். இந்தச் சொத்தையும் சேர்த்து சுமக்க தயாராக இல்லை”.“என்னிடம் இதுபோல்பல சால்வைகள் உள்ளன. அதில் ஒன்றைத் தானே கொடுத்தேன். இதை ஏற்பதில் என்ன தயக்கம்!”“மகனே! உன்னிடம்ஏற்கனவே ஒரு நாடுஇருக்கிறது. அது போதாதென்று இன்னொரு நாட்டையும் பிடிக்கச் செல்கிறாய். அப்படியானால், உனக்கு தேவைஅதிகமாக இருக்கிறது. தேவை உடையவனே ஏழை.அவனுக்கே பொருட்கள் தேவை,”.அரசனுக்கு துறவியின் வார்த்தைகள் சம்மட்டியால் அடித்ததுபோல் இருந்தது. போர் எண்ணத்தைக் கைவிட்டு, அவன் நாடு திரும்பினான்.