உடுமலை: உடுமலை, நேருவீதி காமாட்சி அம்மன்கோவிலில், ஆடிமாதத்தையொட்டி, அம்மனுக்கு வளையல் அலங்கார பூஜை நடந்தது. ஆடி மாதத்தில், அம்மன் கோவில்களில் சிறப்பு அபிேஷகஅலங்கார பூஜை நடக்கிறது. இதில், வளையல்அலங்கார பூஜையும் ஒன்று. திருமணமாகாத பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டி வேண்டுதல் வைக்கும் பெண்களும், வேண்டுதல்களை நிறைவேற்றுபவர்களும், அம்மனுக்கு, வளையல்களை காணிக்கையாக படைத்து வழிபடுகின்றனர். நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனுக்கு, சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வண்ண வளையல்கள் சாற்றப்பட்டது.