திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தெப்பல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2018 03:08
வில்லியனுார்: கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தெப்பல் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்று வரும் விழாவில், ஒவ்வொரு நாளும் காலையில் சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி மாட வீதியுலா நடந்தது. கடந்த 12ம் தேதி ஆடிப்பூர தேர் திருவிழா நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று புதுச்சேரி மாநில அனைத்து மீனவர் குல மரபினர்களின் தெப்பல் உற்சவம் நடந்தது. விழாவில் அமைச்சர்கந்தசாமி, எம்.எல்.ஏ.,க்கள் சுகுமாறன், தீப்பாய்ந்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்தவர்களை விழாக்குழு தலைவர் முன்னாள் .எம்.எல்.ஏ., இளங்கோ வரவேற்றார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் தலைமையில் உற்சவதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.