பதிவு செய்த நாள்
16
ஆக
2018
04:08
தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!
சுக்கிரன் ஆக.31 வரை உங்களுக்கு சாதகமாக 5-ம் இடத்தில் இருப்பதால் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். அதன்பின் அவரால் நற்பலன் கொடுக்க முடியாது. முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். புதன் ஆக.28 வரை சாதகமற்ற நிலையில் இருப்பதால் பகைவரால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. அதன்பிறகு 4-ம் இடத்தில் இருந்து நற்பலன் கொடுப்பார். அவரால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ராகு மாதம் முழுவதும் நன்மை தரக் காத்திருக்கிறார். அவரால் செயலில் வெற்றி, பொருளாதார வளம், தொழிலில் வளர்ச்சி உண்டாகும்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருப்பதால் உடல்நலக்குறைவு ஏற்படலாம். மனதில் தளர்ச்சி உண்டாகும். குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 9-ம் இடத்துப்பார்வை சாதகமாக காணப்படுகிறது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறையும் போக்கும் ஆற்றல் பிறக்கும். குடும்பத்தில் சுக்கிரனால் பணப்புழக்கம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆக.28க்கு பிறகு புதனால் உங்களுக்கு சாதக பலன் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை தேடித் தருவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். செப்.2,3 ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக.28,29,30ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். செப்.14க்கு பிறகு கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
அரசுப்பணியாளர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். ஆக.28க்கு பிறகு திறமைக்கு ஏற்ற கவுரவமான பதவி கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நற்பலன் காணலாம். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். ஆனால் பெண்கள் வகையில் ஒதுங்கி இருக்கவும். ஆக.26,27ல் உன்னதமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
வியாபாரிகளுக்கு சுக்கிரனால் லாபம் கிடைக்கும். விண்ணப்பித்த வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பகைவர் தொல்லை, அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு முதலியன ஆக.28க்கு பிறகு மறையும். அதுவரை வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு புதனால் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆக.17,18, செப்.13,14ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். செப்.14க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணம் மேற்கொள்வர். அரசியல்வாதிகள், பொதுநலசேவகர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கப்பெறுவர். ஆக.31க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் தொண்டர்களிடம் அனுசரித்து போவது நல்லது. மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து ஆக.28 க்கு பிறகு விடுபடுவர். புதனால் கல்வி வளர்ச்சி காணலாம். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும் போட்டிகளில் பங்கேற்று பரிசு, பாராட்டு கிடைக்கப் பெறுவர். விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகலாம். ஆனால் கால்நடை வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். காய்கறிகள், கீரை வகையில் நல்ல வருமானம் வரும்.
பெண்கள் குடும்பத்தாரின் மத்தியில் கவுரவம் காண்பர். உங்களால் வீட்டிற்கு பெருமை உண்டாகும். நகை, ஆபரணம் வாங்கலாம். செப். 6,7ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஆக.19,20, செப்.15,16ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக.28க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
* நல்ல நாள்: ஆக.17,20,21,26,27,28,29,30, செப்.4,5,7,8,9,12,13,16
* கவன நாள்: ஆக. 21,22,23 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,6
* நிறம்: வெள்ளை, நீலம்
பரிகாரம்:
● சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை
● சனிக்கிழமையன்று அனுமனுக்கு துளசி அர்ச்சனை
● வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கு