பதிவு செய்த நாள்
16
ஆக
2018
04:08
பெற்றோர் மீது பேரன்பு கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
இந்த மாதம் குரு, சுக்கிரன், ராகு மாதம் முழுவதும் நற்பலன் வழங்குவர். புதன் ஆக. 28 வரை சாதகமான பலன் கொடுப்பார். மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லாவிட்டாலும் பாதிப்பேதும் உண்டாகாது. பொருளாதார வளம் சிறக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். சூரியனால் பண விரயம் ஏற்படலாம். குருபகவான் 2-ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான அம்சம். மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். குடும்பத்தில் தேவையான பொருட்கள் குறைவின்றி கிடைக்கும். அண்டை வீட்டாரின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
குடும்பத்தில் பெண்களால் இனிய அனுபவம் உண்டாகும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக.31 க்கு பிறகு எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆக.24,25ல் சுபசெய்தி கிடைக்கப் பெறுவீர்கள். ஆக.20,21, செப்.16ல் உறவினர்களால் நன்மை கிடைக்கும். அதே நேரம் ஆக.31, செப்.1,2 ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். செப்.14 க்கு பிறகு வீட்டினுள் சில பிரச்னை உருவாகலாம். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.
பணியாளர்களுக்கு வளர்ச்சிக்கான காலகட்டமாக அமையும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் பதவி உயர்வும் காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். ஆக.31க்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். செப்.4,5ல் சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். செப்.14க்கு பிறகு திடீர் பணி, இடமாற்றத்தை சந்திக்க வாய்ப்புண்டு.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு புதனால் மாத முற்பகுதியில் பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த முயற்சி வெற்றி அடையும். ராகுவால் வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி பெறும். ஆக.31க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஆக. 26,27ல் எதிர்பாராத வகையில் வருமானம் இருக்கும்.
செப்.14க்கு பிறகு படிப்படியாக வேலைப்பளு அதிகரிக்கும். எதிரி தொல்லை தலைதூக்கும். ஆக.17,18, செப்.8,9,10,13,14ல் சந்திரனால் தடைகள் வரலாம்.
கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு விரும்பியபடி இருக்கும். ஆக.31க்கு பிறகு அரசிடம் இருந்து விருது கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிரத்தை எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆக.28க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆனால் குருவால் ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு துணைநிற்கும்.
விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். எள், கரும்பு, கோதுமை, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல விளைச்சல் பெறுவர். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு அமையும். பெண்களுக்கு குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவி தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் வந்து சேரும். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். ஆக.21க்கு பிறகு தோழியர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் திடீர் இடமாற்றத்தை காணலாம். ஆக.19,20,செப்.15,16 தேதிகள் சிறப்பானதாக இருக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஆக. 28,29,30ல் விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர்.
* நல்ல நாள்: ஆக.19,20,26,27,28,29,30, செப்.4,5,6,7,11,12,15,16
* கவன நாள்: ஆக.31, செப்.1 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:5,7
* நிறம்: நீலம், மஞ்சள்
பரிகாரம்:
● வெள்ளிக்கிழமையில் லட்சுமிக்கு அர்ச்சனை
● தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
● செவ்வாயன்று முருகன் கோயிலில் நெய் தீபம்