பதிவு செய்த நாள்
16
ஆக
2018
05:08
நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் தனுசு ராசி அன்பர்களே!
புதன் ஆக.28 வரை சாதகமான இடத்தில் இருப்பதால் முயற்சி யில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். அதன் பிறகு புதன் சாதகமற்ற இடத்திற்கு செல்கின்றார் என்று கவலை கொள்ள வேண்டாம் காரணம் சுக்கிரன் ஆக.31ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 11-ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார். இதுவும் சிறப்பான இடம் ஆகும். அவர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வார். மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் சிறப்பாக உள்ளன. அதன் மூலம் நன்மை அதிகரிக்கும்.
சூரியனால் மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. புதனால் ஆக.28 க்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்கவேண்டிய திருக்கும். எனவே வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். மனதில் மகிழ்ச்சி குடியிருக்கும். ஆக.31க்கு பிறகு வசதி வாய்ப்பு பெருகும். வருமானம் திருப்தியளிக்கும். சொந்தபந்தங்கள் வருகை அடிக்கடி இருக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். குறிப்பாக ஆக.21,22,23ல் அவர்களால் நன்மை ஏற்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக.17,18, செப்.13,14ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஆக.28,29,30ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். செப்.14க்கு பிறகு கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பணியாளர்கள் சீரான நிலையில் இருப்பர். புதனின் பலத்தால் நல்ல வளர்ச்சி உண்டாகும். சிலர் பதவி உயர்வு காண்பர். வேலையில் உங்களின் திறமை பளிச்சிடும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். ஆக. 28க்கு பிறகு வேலையில் அதிக பளுவும், அலைச்சலும் உண்டாகும். செப்.11,12ல் அனுகூலமான பலன்கள் நடக்கும். செப்.14க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.
வியாபாரிகள் பொதுவாக சிறப்பான நிலையில் இருந்தாலும் இந்த மாதம் ஆக.28 முதல் செப்.14 வரை அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும். பகைவர் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆக.19,20,24,25, செப்.15,16ல் பணவிரயம் ஆகலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்.
கலைஞர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை, முயற்சியில் இருந்த தடை, இடமாற்ற பீதி முதலியன ஆக.31க்கு பிறகு மறையும். அதன் பிறகு எதிர்பார்த்த புகழ், பாராட்டு போன்றவை கிடைக்கப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்காலத்தில் அதற்கான பலன் கிடைக்கும்.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம். ஆக. 28 முதல் செப். 14வரை அக்கறையுடன் படிக்க வேண்டியதிருக்கும். அதன்பின் குரு பக்கபலமாக இருப்பதால் கல்வியில் வளர்ச்சி காண்பர். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் பணவரவுக்கு குறைவிருக்காது. புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பணியிடத்தில் உங்களின் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர். ஆக.28க்கு பிறகு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். செப்.4,5ல் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும்.
* நல்ல நாள்: ஆக.17,18,21,22,23,26,27, செப்.2,3,4,5,11,12,13,14
* கவன நாள்: செப்.6,7 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்: பச்சை, மஞ்சள்
பரிகாரம்:
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு பாலபிஷேகம்
● செவ்வாயன்று முருகப்பெருமானுக்கு அர்ச்சனை
● சனிக்கிழமையன்று சனீஸ்வரருக்கு எள் விளக்கு