காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2018 05:08
காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் சொர்ணவள்ளி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
காளையார்கோவில் சொர்ணவள்ளி அம்மன் கோயிலில்ஆடிபூரம் உற்சவ விழா ஆக 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பெருமாள் அழைப்பு நடந்தது. சுவாமி அம்பாள் திருமண அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். காளீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க, திருமறை, வேத பாராயணங்களுடன் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. கல்யாண கோலத்தில் சுவாமியும்,அம்பாளும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்களுக்கு திருமாங்கல்ய பிரசாதங்கள் வழங்கப்பட்டது.