பதிவு செய்த நாள்
17
ஆக
2018
11:08
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி உடல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு, வடம் பிடித்து இழுத்தனர். ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி உடல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7 ம் தேதி துவங்கியது.
விழாவையொட்டி மணிமுக்தா நதிக்கரையில் இருந்து சக்தி அழைத்தல், கொடி ஏற்றுதல், காப்பு கட்டுதல், அங்காளம்மன் பிறப்பு, பால்குடம் எடுத்தல் நிழ்ச்சிகளுடன், நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இரவு வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் சாகை வார்த்தல், காத்தவராயன்– ஆரியமாலா திருக்கல்யாணம் வைபவம், சின்னாள் மோடி எடுத்தல், கழுகு மரம் ஏறி மீளுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு அக்னி மூட்டுதல், 9 மணிக்கு காளி கோட்டை இடித்தலுக்கு பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து தேரில் எழுந்தருள செய்து தேர் வடம் பிடித்தல் நடந்தது. இதில், திரளாான பக்தர்கள் பலர் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர்.