திருப்பதி:காளஹஸ்தீஸ்வரன் கோவிலுக்கு, வெள்ளியால் ஆன வில்வ மாலை மற்றும் தாமரை பூ மாலையை, பக்தர்கள் நன்கொடையாக வழங்கினர்.ஆந்திராவில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோவிலில், வழிபாடு தெய்வங்களாக உள்ள காளஹஸ்தீஸ்வரனுக்கும், ஞானபிரசூனாம்பிகை அம்மனுக்கும், விசாகப்பட்டினம் மாவட்டம் சீத்தம்பேட்டையைச் சேர்ந்த சீனிவாஸ் குடும்பத்தினர், வில்வ மாலையை நன்கொடையாக அளித்தனர்.மொத்தம், 205 கிராம் எடையுள்ள, 108 இலைகளுடன் கூடிய வெள்ளி வில்வ மாலை மற்றும், 29 பூக்களால் தயாரிக்கப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்ட, 414 கிராம் எடையுள்ள வெள்ளி தாமரை பூ மாலை ஆகியவற்றை நன்கொடையாக வழங்கினர்.