பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக, பரமக்குடியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி நிறைவடைந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக சின்ன காஞ்சிபுரம் பகுதியில் சிலைகள் தயாரிப்பு பணி நடக்கிறது.பரமக்குடியில் 3 அடி முதல் 10 அடி வரையிலான சிலைகள் செய்யப்பட்டுள்ளன.தொடர்ந்து ஆக., 30 அன்று சதுர்த்தி விழாவில் பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு நாட்களில் நகரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படும்.