பதிவு செய்த நாள்
19
ஆக
2018
01:08
சென்னை: ஹாரிங்டன் சாலை, ஸ்ரீகோலாத்தம்மன் ஸ்ரீவேம்புலியம்மன் கோவிலில், ஆடிப்பெருவிழா இன்றுடன் முடிகிறது.சென்னை, ஹாரிங்டன்சாலை, பச்சையப்பன் கல்லுாரி அருகில், ஸ்ரீகோலாத்தம்மன் ஸ்ரீவேம்புலியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின், ஆடி பெருவிழா, 15ம் தேதி துவங்கியது. இன்றுடன் விழா முடிகிறது.நேற்று காலை, 6:30 மணிக்கு, மஹா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, 8:00 மணிக்கு, அம்மன் பூங்கரகம் திருவீதி உலா நடந்தன.இன்று காலை, 6:30 மணிக்கு, மஹா அபிஷேகம்மற்றும் சிறப்பு பூஜைகள், 8:00 மணிக்கு, அம்மன் பூங்கரகம் திருவீதி உலா, மதியம், 12:00 மணிக்கு, அம்மனுக்கு கூழ் வார்த்தல், அன்னதானம் நடக்கிறது.இரவு, 8:00 மணிக்கு, ஸ்ரீகோலாத்தம்மன், ஸ்ரீவேம்புலியம்மன் சர்வ அலங்காரத்துடன், மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன், திருவீதி உலா நடக்கிறது.
விழாவில், 15ம் தேதி, பஞ்சமி மஹா அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்றைய தினம், ஸ்ரீ கோலாத்தம்மன் உட்பிரகாரம் திருஉலா வருதல், ஊஞ்சலில் காட்சி தருதல், சிறப்பு பூஜைகள் நடந்தன. சேவார்த்திகள் சேவா சத்சபாவினரின், பக்தி பாடல் கச்சேரியும் நடந்தது. அடுத்த நாள் மஹா அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. 17ம் தேதி, மஹா அபிஷேகம், சிறப்பு பூஜைகள், காப்பு கட்டுதல், அம்மன் பூங்கரகம் திருவீதி உலா நடந்தன. இதற்கான ஏற்பாடுகள் சேவார்த்திகள் சேவா சத்சபா சார்பில் செய்யப்பட்டன.