பதிவு செய்த நாள்
20
ஆக
2018
10:08
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமிநரசிம்மர் பெருமாள் கோவிலில், 203வது சுவாதி சுதர்சன நரசிம்ம ஹோமம் நடந்தது. சுவாதியை முன்னிட்டு, காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை மூலவருக்கு அபிேஷகமும், காலை 7:30 மணிக்கு மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பின், காலை 8:30 மணிக்கு சுவாதி ஹோமம் ஆரம்பம், வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் யாகசாலைக்கு புறப்பாடு மற்றும் காலை 9:00 மணிக்கு சுதர்சன நரசிம்ம ஹோமம் ஆரம்பம், சுதர்சன பெருமாள், நரசிம்ம பெருமாள் மந்திரங்கள் ஜெபம் செய்யப்பட்டு, ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பகல் 11:30 மணிக்கு வசுத்தாரா ஹோமம், பகல் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. பகல் 12:30 மணிக்கு கலசம் புறப்பாடாகி மூலவர் மற்றும் உற்சவர் விக்ரஹங்களுக்கு கலச தீர்த்தம் சேர்க்கப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு ேஹாமத்தில் பூஜை செய்த கயிறு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயக்குமார், கோவில் முதன்மை அர்ச்சகர் பார்த்தசாரதி செய்திருந்தனர்.