சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், ஞாயிறுதோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அதன்படி, கோவில் விழாக்குழு சார்பில், நேற்று காலை, 6:00 மணிக்கு, சிறப்பு பூஜை, விசேஷ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, சயன கோலத்தில் சுவாமி காட்சியளித்தார். அதேபோல், ஆஞ்சநேயருக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, வடைமாலை, வெண்ணெய் ஆகியவை சாத்து படி செய்யப்பட்டது. ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர்.