காஞ்சிபுரம்: ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, 208 பால் குடம் ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நேற்று நடைபெற்றது. பெரிய காஞ்சிபுரம் பூவசரம்தோப்பு தெருவில், ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இக்கோவிலில் ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெறும். கடந்த மாதம், 20ல் திருவிழா துவங்கியது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன், விதவிதமான அலங்காரத்தில் காட்சியளிப்பார். நேற்று காலை, கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து, 208 பால்குடம் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று, மதியம் கோவிலை அடைந்து, பாலாபிஷேகம் நடந்தது. இரவில், ரேணுகாம்பாள் வீதிவுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.