பதிவு செய்த நாள்
21
ஆக
2018
10:08
முத்தியால்பேட்டை: முத்தியால்பேட்டையில் உள்ள மூலஸ்தம்மனுக்கு, 23ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை கீழ் தெருவில், ஸ்ரீ மூலஸ்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை, வாழ்முனி நாயக்கர்- மீனாட்சியம்மாள் குடும்பத்தினர், சிறியளவில் கட்டி வழிபட்டு வந்தனர். தற்போது, அந்த கோவில் பெரிய அளவில் கட்டப்பட்டு உள்ளது.இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு, ஆண்டு தோறும் ஆடித் திருவிழாவின் போது, கசத்துமேடு பகுதியில் இருந்து ஜோடிக்கப்பட்ட கரகத்தில் புனித நீர் எடுத்து வந்து, அபிஷேகம் செய்வது வழக்கம்.இந்நிலையில், இந்த கோவிலில், 23ம் தேதி காலை, 9:30 மணி முதல், 11:00 மணிக்குள், துலா லக்னத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இன்று காலை, 9:30 மணிக்கு மகா கணபதி பூஜையும், மாலை, 5:30 மணிக்கு, முதல் கால யாக பூஜையும் நடைபெறும். இரவில், இசை கச்சேரி நடைபெற உள்ளது.
நாளை காலை, 8:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், மாலை, 5:30 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும் நடைபெற உள்ளன. நாளை மறுதினம் காலை, 8:00 மணிக்கு, நான்காம் கால பூஜையும், காலை, 10:30 மணிக்கு, அம்மனுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. இதையடுத்து, காலை, 11:00 மணிக்கு, மூலவருக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது.கோவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடு களை, ஆர்.வி.ரஞ்சித்குமார் குடும்பத்தினர் செய்துள்ளனர்.